கைது செய்யப்பட்ட இரு ஈரானியாரும் பணத்திற்காக அமெரிக்காவின் உளவு அமைப்பு சிஐஏ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியது உறுதியானதாக ஈரான் நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து முதல் நபராக ரிசா அஸ்ஹரிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்தது. இதனை அடுத்து மற்றொரு குற்றவாளி மஜித்துக்கு கூடிய விரைவில் தூக்கு தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஈரான் அரசு பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
Categories
இங்க இருந்துகிட்டு… அந்த நாட்டுக்கா ரகசியத்த சொல்லுறீங்க… தூக்கில் தொங்க விட்ட ஈரான்..!!
