Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமாகாத விருத்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் அமுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமுல்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 4 வருடங்களாக தீவிரமாக அமுல்ராஜ்க்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண் கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த அமுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமுல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |