வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக வலுவடைந்ததையடுத்து வங்காளதேசத்தில் நேற்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களுக்கும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். இன்னும் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் தங்கும் இடமாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உதவ 104 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறது. 323 டன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் விநியோகம் தயார் நிலையில் உள்ளது.
அதனை போல மேற்குவங்க மாநிலத்தில் சிட்ரங்க புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையயோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது. இதன் எதிரொலியால் வங்காள தேசத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவில் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.