தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சித்தேரி ரயில் நிலைய இணைப்பில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரயிலின் 14-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்திலிருந்து கிழே இறங்கியுள்ளது. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனே நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்த்ததில் ரயில் பாதையில் பசுமாடு ஒன்று சிக்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை அடுத்து அந்த மாடு ரயிலில் சிக்கிய காரணத்தினால் சக்கரம் தடம்புரண்டதா இல்லை அதே பகுதியில் ஏற்கனவே சென்ற ரயிலில் மோதி இறந்து உள்ளதா எனவும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு காவல்துறையினர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தடம்புரண்ட ரயிலின் சக்கரத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்துள்ளனர். மேலும் இதனால் பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.