Categories
உலக செய்திகள்

திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கம்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் திடீரென மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் வீடு இடைந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கைராகாவன் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனை பூர்பிசவுக்கி கிராம கவுன்சில் தலைவர் ராம் பிரசாத் உபாத்யாய் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |