கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தம்.
கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் ஆகியவை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும்.
தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமான பிரச்சனை அதிகமாக இருக்கும். எண்ணெய் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிகம் நெஞ்செரிச்சல் உண்டாகும்.
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால் தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருந்து, கல்லீரல் வீக்கமடையும்.