Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு!…. 50,000 வேலை வாய்ப்புகள் எங்கே?…. கொந்தளித்த பரூக் அப்துல்லா….!!!

காஷ்மீரில் செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாடு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி. யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீ நகரில் தேசிய மாநாடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய பிரிவினை காலத்தில் முகமது அலி ஜின்னா எனது தந்தை ஷேக்முகமது அப்துல்லாவின் ஆதரவை கூறினார். அப்போது எனது தந்தை இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார்.

நல்ல வேலையாக காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவில்லை. இந்தியாவில் 80% பேர் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீரில் ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது அவை எங்கே?‌. எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ செவிலியர்கள் என அனைவரும் வேலை இல்லாமல் உள்ளனர். அதனை தொடர்ந்து எந்த மதமும் தீங்கானது கிடையாது. அந்தந்த மாதங்களில் இருக்கும் தீய மனிதர்கள் தான் தீமையை விளைவிக்கின்றனர். கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை, அவர் பொதுவானவர். வேற்றுமையில் ஒற்றுமையை தான் இந்தியாவின் வலிமை‌‌. ஜம்மு காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |