தேர்தல் பணிகளை பார்வையாளர் எஸ். வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அதன்பின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வார்டு வாரியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து, அவர்களை வரவழைத்து வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வேட்பு மனுவுடன் வழங்கிய படிவங்களில் உரிய முறையில் பூர்த்தி செய்து ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றதா என சரிபார்த்த பின் வேட்புமனுவை தாக்கல் செய்தவர் மற்றும் அவரின் முகவர்களிடம் தெரிவித்து வேட்பு மனு ஏற்கப்பட்டது குறித்தும், வேட்புமனுக்கள் நிராகரிப்பு குறித்தும், அதற்கான காரணங்கள் பற்றியும் தெரிவித்து வேட்புமனுவை நிராகரித்துள்ளனர்.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதை மனு தாக்கல் செய்பவர்கள் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான விளக்கங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட தேர்தல் பணிகளை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வளர்மதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் வேட்புமனுக்கள் நிராகரிப்பு மற்றும் ஏற்பு பற்றிய விவரங்களை கேட்டறிந்துள்ளார்.