Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை; மே 3 வரை தொடரும் – தமிழக அரசு!

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவதைக்கிறது. இதனால் நாளை முதல் பழைய ஊரடங்கு முறையே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை. மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |