Categories
தேசிய செய்திகள்

கடந்த 68 ஆண்டுகளில்… முதல்முறையாக புகழ்பெற்ற படகுப்பந்தயம் ரத்து..!!

68 வருடங்கள் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு டிராபி படகு பந்தயம் இந்த வருடம் கொரோனா அச்சத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கேரளாவிற்கு வருகை தந்த சமயம் அம்மாநில அரசு பாம்பு படகு பந்தயத்தை மிகவும் விமர்சையாக நடத்தியது. நேரு அவர்கள் வந்தபோது இந்தப் பந்தயம் தொடங்கப்பட்டதால் இதற்கு நேரு டிராபி படகு பந்தயம் என பெயர் வைக்கப்பட்டது. அந்நாள் முதல் வருடம்தோறும் இந்த போட்டி நடைபெற்று வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்கள் வெள்ளம் காரணமாக நேரு டிராபி பந்தயம் ஒத்திவைக்கப்பட்டு, சில தினங்கள் கழித்து நடந்து முடிந்தது. ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதிலும் இருக்கும் ரெகாட்டா மீது அளப்பரிய ஆர்வம் கொண்டவர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. 68 ஆண்டுகள் நடந்து வந்த இந்த போட்டி இந்த வருடம் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |