Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலம்…. மொத்தம் ரூ.54 1/2 லட்சத்திற்கு விற்பனை…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

தேங்காய் பருப்பு ஏலம் ரூ.54 1/2 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், கொடுமுடி, ஈரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.84.60-க்கும், குறைந்தபட்சம் ரூ.69-க்கும் கொள்முதல் செய்தனர். இந்நிலையில் விற்பனை கூடத்தில் மொத்தம் ரூ.54 லட்சத்து 66 ஆயிரத்து 61-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |