தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இந்த வாரம் தென்கிழக்கு கடலோர நகரமான டர்பனின் சில இடங்களில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் ஏறத்தாள 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு, வீடுகள், மருத்துவமனைகள் உட்பட அனைத்து இடங்களிளும் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வரை பலி எண்ணிக்கை 398 ஆக உள்ள நிலையில் 3.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கிடையில் சுமார் 40,000 மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர். மேலும் 27 பேர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலைமை வரும் வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.