Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில் முன் பைக் திருட்டு… வாகன சோதனையில் சிக்கிய இருவர்… போலீஸ் விசாரணை…!!

இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்த வழியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. பின் அவர்களை கைது செய்த போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |