மர்ம நபர்கள் 24 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் கோபால்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோபால்சாமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.