Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 25 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |