மணல் கடத்திய குற்றத்திற்காக போலீஸார் 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் போலீசாருக்கு வளதோட்டம் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, சம்பா இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 3 நபர்களும் அதே பகுதியில் வசித்து வரும் ரமேஷ், பிரகாஷ் மற்றும் வெங்கடேசன் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் மணலையும், மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.