திருமண விழாவிற்கு சென்ற கும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளர்.
செங்குன்றத்தை சேர்ந்தவர் மனிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 8ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.
திருமண விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய மனிஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகையையும் அரை கிலோ அளவில் வெள்ளி பொருட்களையும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளையும் கொள்ளையடித்து விட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் மனிஷ். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.