Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பிரார்த்தனா என்ற குழந்தையும் இருக்கின்றார். இந்நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த சரவணன் அவரைக் காப்பாற்ற சென்ற போது அவரின் உடலிலும் தீ பற்றிக்கொண்டது.

அதன்பின் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து இருவரின் உடலில் எரிந்த தீயை அவர்கள் அணைத்துள்ளனர். ஆனால் சம்பவ இடத்திலேயே ஸ்ரீபிரியா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஸ்ரீபிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |