Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் சிம்சன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேமா கடந்த 30-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மண்ணெண்ணெய் பிரேமா மீது விழுந்து தீப்பிடித்தது.

இதில் பிரேமா பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரேமாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |