உ.பியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த இரு பெண்களுக்கும் இது தெரியாது. இரு பெண்களிடமுமே அந்த இளைஞன் நன்றாக பேசி பழகி ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் அந்த இளைஞனை விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் அந்த இளைஞன் இரண்டு பெண்களையும் சமாதானம் செய்து, ஒரே நேரத்தில் இருவரையுமே கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.