உலக சுகாதார அமைப்பு இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, போர்ச்சுகல், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, நைஜீரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 89 நாடுகளில் பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது 89 நாடுகளில் பரவி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை விட 1 1/2 நாள் முதல் 3 நாளில் இரு மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.