Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி… எதிர்பாராதவிதமாக துடிதுடித்து பலி… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்தாகி ராமராவ்(37). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூரில் அவரது மனைவி சுஜாதா(23) மற்றும் மகன் சித்து(4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமராவ் அதே பகுதியில் உள்ள ஒரு காகித ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமராவ் வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர் குளித்து கொண்டிருக்கும்போது தண்ணீர் தொட்டிக்கு அருகே உள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து ராமராவ் மீது விழுந்ததுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்த பரமத்திவேலூர் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று ராமராவின் உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |