Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : 150 இந்தியர்களை கடத்திய தலிபான்கள்?.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தலிபான்கள்  150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து  வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள்  250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து  தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் c -130j  மூலம் 85 பேர் மீட்கப்பட்டனர்..

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 150க்கும் அதிகமான இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. காபூல் விமான நிலையத்தில் காத்திருந்தவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது..

Categories

Tech |