தேவிஸ்ரீ துர்காவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பட்டியலின பகுதியை சார்ந்த காவல்துறையின் காவல் உதவி ஆய்வாளர் பணி புரிந்துவரும் முருக சுந்தரத்தின் மகள் தேவி ஸ்ரீ துர்கா. இவர் சென்ற இரு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்த வருடம் தீவிரமாக படித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மு க ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை பதிவிட்டு இருந்தார். தற்போது இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் இது போன்று தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்காக கூறிய அறிவுரையில், வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது., வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.