கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர் . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பின்னர் பேருந்து ஓட்டுனர் பேருந்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது . இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.