ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர்.
இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்தனர். பின்னர் பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படைவீரர்களுக்கு நீண்ட நேரமாக சண்டை நீடித்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இப்பகுதியில் இருக்கின்றார்களா ? என்று தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.