Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… கேரள பெண் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஊரடங்கால் தான் கஷ்டப்பட்டு வந்தாலும், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை சேர்த்து கொடுத்த பெண் பலரது பாராட்டையும் பரிசையும்  பெற்று வருகிறார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென எர்ணாகுளத்தில் உள்ள கும்பலங்கி கிராமத்தில் வசித்து வரும் மேரி ஜெபஸ்டின் என்ற பெண் நினைத்துள்ளார். இதற்காக தனது வீட்டில் தயாரிக்கும் உணவு பொட்டலத்துடன் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று உணவு பொட்டலங்களை சேகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் அவர் வழங்கிய உணவு பொட்டலங்களுடன்சேர்த்து  நூறு ரூபாய் நோட்டையும் பாதுகாப்பாக வைத்து கொடுத்துள்ளார்.

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் ஜெபஸ்டின் கொடுத்த சாப்பாடு  பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதற்குள் 100 ரூபாய் நோட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து உடனே தனது நண்பர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்களும்  பொட்டலங்களுடன் 100 ரூபாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததை கூறினர். மேலும் இதனை வைத்து அனுப்பியது யார் எனத் தேடி பார்த்த போதுதான் மேரி ஜெபஸ்டின் என கண்டுபிடித்து இவர் செய்த மனிதாபிமான உதவியை பாராட்டி கேரள மக்கள் பரிசலித்து வருகிறார்கள். இது குறித்து மேரி ஜெபஸ்டின் கூறும்போது, “என்னால் முடிந்த மிகச்சிறிய அளவில் மக்களுக்கு உதவ நினைத்தேன்.

எனக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உண்டு. இங்கு கடுமையான குளிர் நிலை ஏற்பட்டு இருப்பதால் பலரும் டீ குடிக்க ஆசைப்படுவார்கள். வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வைத்த பணம் டீ சாப்பிடுவாவது  உதவுமே என்று நினைத்தேன். அதனால் தான் 100 ரூபாய் வைத்து கொடுத்தேன்.  நான்தான் இதை செய்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது” இவ்வாறு அவர் கூறினார். தற்போது மேரியும் அவரின் கணவர் ஜெபஸ்டினும் ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சென்ற மாதம் 15 நாட்கள் மட்டுமே மேரி வேலை பார்த்துள்ளார். அந்த சம்பளத்தை வாங்கி தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். இவரது மனித நேயத்தை பாராட்டி பலரும் இப்போது பரிசு அளித்து வருகின்றனர்.

Categories

Tech |