உலகிலேயே மிகச்சிறிய நாட்டைதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த நாட்டினுடைய பெயர் THE PRINCIPALITY OF SEA LAND. இந்த நாடு லண்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த நாடு எப்படி உருவாக்கப்பட்டது என்றால் WORLD WAR 2 நடக்கும்போது ஜெர்மனியிடமிருந்து காப்பாற்றுவதற்காக இந்த இடத்தில் tower ஒன்றை கட்டுகிறார்கள். ஆனால் இந்த இடம் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எல்லைக்கு வெளியில் இருந்ததால் அந்த இடம் ilegal ஆகிவிட்டது. அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் இதனை கைவிட்டு விட்டார்கள்.
சிறிது நாட்கள் கழித்து பிரிட்டிஷ் ஆர்மியில் வேலைபார்த்த ராய்பேட்என்கிற மேஜர் இந்த இடத்தில் சென்று வசிக்கிறார். 1960இல் அந்த இடத்திற்கு ஒரு ரேடியோ ஸ்டேஷனை கொண்டு வருகிறார். அதன்பின் இந்த இடம் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு சொந்தம் இல்லை என்ற விஷயம் அவருக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் அந்த இடத்தை தனி ஒரு நாடாக மாற்ற நினைக்கிறார். UK அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார். இதில் அவர் வெற்றி கண்டு இந்த இடத்தை தனி நாடாகவும் அறிவித்தார். இந்த நாட்டிற்கு என்று PASSPORT, CURRENCY, NATIONAL ANTHEM போன்ற அனைத்துமே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் அந்த நாட்டில் ஒரு FOOTBALL TEAM கூட இருக்கின்றது.