Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய நபர்… மின்கம்பத்தில் தொங்கிய பிணம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மின்கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள தெற்கு தென்பரை பாமணி ஆற்றங்கரை அருகில் மின்கம்பம் ஓன்று உள்ளது. இதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து திருமக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தத இளைஞர் யார் என்றும் அவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள இடும்பாவனம் அடங்கிய விளாகம் பகுதியை சேர்ந்த முருகேசன்(39) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |