Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு திருவிழாவிற்கு 2000 கன அடி நீர் திறப்பு… மக்களிடையே சோகம் !!

நாளை  ஆடி பெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  2000 கன  அடி  நீர்  திறக்க  தமிழக அரசு  முடிவுசெய்துள்ளது .

ஆடிபெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  நாளை  காலை  11.30 மணிக்குமேட்டூர்  அணையில்  இருந்து  வினாடிக்கு  1,000 கன அடியில்  இருந்து  2,000 கன அடி    திறந்து  விடப்படுவதாக  பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும்  தண்ணீர்  ஈரோடு  மற்றும்  கரூர்  வரை  செல்வதற்கான  சார்த்தியக்கூறுகள் இருக்கும்  நிலையில்  டெல்டா  மாவட்டமான  கடையமடை  வரை  செல்வதற்கு  வாய்ப்புயில்லை. ஏனென்றால்  குடிநீர்  தேவைக்காக  கரையோர  மக்கள்  அணையில்  இருந்து  நீர்  எடுக்கப்படுகிறது  . இந்நிலையில் திறந்து விடப்படும்  நீரின்  அளவு  குறைவாக  இருப்பதால் டெல்டா  மாவட்டமான  கடையமடை  வரை  செல்வதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும்  கடந்த  2017 ஆம்  ஆண்டில் வினாடிக்கு  ஒரு வாரத்திற்கு  முன்பு  8,000 கன   அடி  நீர்  திறக்கப்பட்டது  பின் படிப்படியாக  குறைக்கப்பட்டு  ஆடி  பெருக்குக்கு  மூன்று  நாட்களுக்கு  முன்   குறைக்கப்பட்டு  3,000 கன  அடி  நீர்  வெளியேற்றப்பட்டது. ஆனால் அதே போன்று  இந்த ஆண்டும்  திறப்பார்கள்  என்று  எதிர்  பார்த்த நிலையில் அரசின் காலம்  தாழ்ந்த  முடிவால்   கரையோர   மக்கள்  ஏமாற்றத்தை  சந்தித்துள்ளனர். ஆனால்  தற்போது  அணைக்கு  நீர்வரத்து   வினாடிக்கு  10 ஆயிரம்  கனஅடி  நீர்  வந்துகொண்டிருக்கும்  நிலையில்  தமிழக  அரசு மேட்டூர்  அணையில்  இருந்து  ஆடி   பெருக்கு  திருவிழாவுக்காக  2,000 கன  அடி  தண்ணீர் மட்டும்  திறக்கப்படுததால்   கரையோர  மக்களிடையே அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தண்ணீர்  திறக்காத  காரணமாக   பொதுப்பணி  துறையினர்  கூறுகையில்  தமிழகஅரசு  எந்தவிதமான  தகவலும்  கூறவில்லை  என்று  கூறுகின்றனர் .ஆனால்  தமிழகஅரசு கூறினால்  மட்டுமே  தண்ணிர்  திறக்க  முடியும்  என்ற  நிலையில், தண்ணீர்  திறப்பதில்  ஏன் தமிழக  அரசு  கவனம்  செலுத்தவில்லை  என்பது  ஒரு  புரியாத  புதிராக    உள்ளது . அரசு   இந்த விஷயத்தில்  கவனம்  செலுத்தியிருந்தால்  2 வது வருடமாக  இந்தவருடமும்  கரையோர  மக்களுக்கு மகிழ்ச்சியான  ஆடி  பெருக்காக  இருந்திருக்கும் . ஆனால்  தற்போது  முறைப்படி  கவனம்  செலுத்தாததால்  இந்தவருட  ஆடி  பெருக்கு  கரையோர மக்களுக்கு  கேள்வி  குறியாகவே  உள்ளது .

 

 

Categories

Tech |