Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
மே 7 மற்றும் 8ம் தேதி கடைகள் திறந்திருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனையாகிருந்தது. இதன் சூழலில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், மேலும் சில வழக்கறிஞர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Categories

Tech |