குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதனை தினிக்க முயன்றால் சட்ட மறுப்பு இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் முன்னெடுப்போம். நெல்லை கண்ணனின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, யாகாவராயினும் நாகாக்க வேண்டும்” என்றார்.