Categories
தேசிய செய்திகள்

“தேசம் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்..!!

 ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானது வருத்தமளிக்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  

ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார்.

Image result for Ram Jethmalani

மேலும் இவர் 2 ஜி , ஸ்பெக்ட்ரம் வழக்குகளிலும் வாதாடினார்.இவர் மத்திய சட்ட அமைச்சர் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில் மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Image result for President Kovind sad

இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,  முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானதில் வருத்தம். அவர் பொதுப் பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை தனது சிறப்பியல்பு வாய்ந்த சொற்பொழிவு மூலம் வெளிப்படுத்தத் தெரிந்தவர். தேசம் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை இழந்துவிட்டது, ஒரு சிறந்த பாலுணர்வு மற்றும் புத்திசாலித்தனம் கொண்ட ஒரு நபர் என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |