சந்திரனில் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகளால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்கி வருகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சந்திரனை சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அந்த அப்பல்லோ விண்கலன்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டதில் அதன் மேற்பரப்பு திராட்சை பழம் போல சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது.

அதனை வைத்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சந்திரன் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுகின்றன. மேலும் சந்திரனின் உட்பரப்புகளில் வெப்பம் மற்றும் குளிர் மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறதென விஞ்ஞானி “தாமஸ் வாட்டர்ஸ்” கூறினார்.