பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நீண்டநாள் திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் திருடர்களின் கைவரிசை பலமாக இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனரான ராஜசேகரனின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிரமாக தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பழைய குற்றவாளியான பாலசுப்பிரமணி என்பவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளார். அந்த விசாரணையின் போது பாலசுப்பிரமணி தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் பாலசுப்பிரமணியின் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரிடமிருந்த 16 பவுன் நகை, 4 மடிக்கணினிகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.