Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கதி… சிகிச்சை பெற்றுவரும் பெற்றோர்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து திரும்பி நேற்று ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் முனீஸ்வரன், வினிதா மற்றும் 6 மாத குழந்தை ஆகியோர் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது லாந்தை கருங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இவருடைய இருசக்கர வாகனம் நிஜ தடுமாறி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் முனீஸ்வரன், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து குழந்தை உட்பட 3 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக 6 மாத குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் தற்போது முனீஸ்வரன் மற்றும் வினிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |