Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநர் நெஞ்சுவலியால் பரிதாப பலி…!!

அண்ணாநகர் பணிமனையில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், 2வது தெருவில் வசிப்பவர் உமாபதி ( 52 வயது).  இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தை எடுப்பதற்காக அண்ணாநகர் பணிமனைக்கு சென்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

Image result for மாரடைப்பு டிரைவர்

உடனே அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதனை அறிந்த அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணிமனையில் ஓட்டுநர் மாரடைப்பால் இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |