சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நேரு பஸார் தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அருண்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிடம் விசாரணை நடத்தியதில் அருண் குமாரின் தாயுடன் தமிழ் செல்வன் கள்ள தொடர்பு வைத்திருந்ததே கொலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.