நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், டோனி அவுட் குறித்து 7 வயது சிறுவன் அழுது கொண்டே தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு சாபமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில் அந்தசிறுவன் டோனி அவுட்டே இல்லை சும்மா அவுட் கொடுக்கறான் என்றும் மூனாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவனை தாய் சமாதானப்படுத்துகிறார்.