Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து… அத்துமீறிய இளைஞன்… 2 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் ஹரிஹரன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் ஹரிஹரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி எழுத்துபூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஹரிஹரன் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஹரிஹரன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகிய இரு பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |