Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் காதலர்கள் பாதிப்பு… வெறிச்சோடிய கன்னியாகுமாரி

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஆள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

காதலர் தினம் என்றாலே காதலர்கள் கடற்கரையிலோ பூங்காவிலும் சிறப்புமிக்க இடங்களிலோ தனது காதலை கொண்டாடுவார்கள். அவ்வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து தங்கள் காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். விடுதிகள் அனைத்தும் அவர்களின் பதிவாகியிருக்கும். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் இருந்த கன்னியாகுமரி ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட கன்னியாகுமரிக்கு வந்ததாக தெரியவில்லை.

எதற்காக இந்த மாற்றம் என காரணம் ஆலோசித்த போது பரவிவரும் கொரோனாவின் அச்சத்தினால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே காதலர் தினத்தை கொண்டாட வெளி நாட்டுப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வரவில்லை.

வெளிநாட்டு பயணிகள் வரவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கன்னியாகுமரிக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது. எனவே கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது காவல்துறையினரும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |