Categories
உலக செய்திகள்

“யாராவது காப்பாற்றுங்கள்” பலபேர் கூடியிருக்க…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்… சிலையாக நின்ற தாய்..!!

சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய  கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி வந்த தந்தை தான் கையில் வைத்திருந்த சிமெண்ட் கட்டையால் தலையை குறிப்பார்த்து தாக்கியிருக்கிறார். இதனால் தள்ளாடியபடி தரையில் விழுந்த அஹலம் உயிர் பிரியும் வரை அவரின் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது. அலறிய சத்தம் கேட்டு கூடிய பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அஹலம்  அவரின் தாயாரிடம் கெஞ்சியும் அந்த தாய் சிலையாக நின்றார் என அச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அஹலம் என்ற பெண்ணின் தந்தையை தடுத்து நிறுத்தியபோது ஏமாற்றமே கிடைத்ததாக பொது மக்கள் கூறியுள்ளனர். இதன்பின் பொது மக்கள் கொடுத்த தகவலின் அருகே அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்தபோது மகளின் சடலத்தின்  அருகே தேநீர் அருந்திக்கொண்டு சிகரெட் பிடித்தவாறு இருந்த தந்தையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அஹலம் கொடூரக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோர்தான் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு ஆணவக்கொலை என்றும் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக வாதாடி வருகின்றனர்.

Categories

Tech |