Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துட்டு… சந்தோசமாக சென்ற குடும்பத்தினர்… தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் செந்தில்வேல் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செந்தில்வேல், அவரது மனைவி அபிநயா மற்றும் சிறுவனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் பரிசோதித்து மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அபிநயா மற்றும் அவரது மகன் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ட்ரைவர் முகிலனை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |