இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி வாலிபர்கள், யானையின் அருகில் நின்று பயமில்லாமல் தங்களது மொபைல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். அதனை அவர்கள், அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.. விபரீதம் அறியாமல் இளைஞர்கள் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்தது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.