தாம்பரம் பகுதியை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியை அடுத்துள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிஷோர்.. இவருக்கு வயது 50 ஆகிறது. இவர் சென்னை ஆவடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் காவல் உதவி ஆய்வாளராக வேலைப்பார்த்து வருகின்றார்.
அதன்பிறகும் கிஷோர் கதவை திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.. அப்போது மின்விசிறியில் கிஷோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்..

இதையடுத்து ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.