தாயை கொன்று இதயத்தை வெளியே எடுத்துள்ள மகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
Meldona நாட்டை சேர்ந்த பெண் anna(21). இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் தன் தாயாரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தன்னுடைய அம்மா உயிரோடு இருக்கும்போது அவருடைய இதயம், நுரையீரல், குடல் முதலான உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து உள்ளார். இந்நிலையில் தன் தாயின் உடலை வெட்டி கூறு போட்டு விட்டு அமைதியாக சென்று ஒரு குளியலைப் போட்டு விட்டு தன்னுடைய காதலனை பார்க்க சென்றுள்ளார் anna. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
அப்போது நீதிபதி வரும்போது, anna நீதிமன்றத்தில் உள்ள ஒரு பெஞ்சில் ஹாயாக படுத்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் பெஞ்ச் மீது ஏறி நின்ற அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய தாயை கொன்று குறித்து கேட்டுள்ளார். அப்போது anna பயங்கரமாக சிரித்துவிட்டு குட் பை என்று சொல்லி விட்டு சென்றுள்ளார். anna ஒரு மருத்துவ கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தன்னுடைய தாயை பெற்ற மகளே கொன்று இதயத்தை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.