நள்ளிரவில் மனைவி தனது புடவையில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரை சேர்ந்த அவதிஷ் குஜார் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சப்னா. இத்தம்பதியினருக்கு இரண்டு வயதில் விராட் என்ற குழந்தை உள்ளது. அவதிஷ் நேற்று பணியை முடித்து மாலையில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் உணவு அருந்திவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்தபோது அருகில் மனைவி இல்லாததை கவனித்துள்ளார் .
அதன்பின் பக்கத்து அறைக்கு சென்ற போது அவரது மனைவி புடவையில் தூக்கிட்டு சடலமாக தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில் “இரண்டு நாட்களுக்கு முன்புதான் இத்தம்பதியினர் மகனின் பிறந்தநாளை கொண்டாடினர். அப்பொழுது சப்னா மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். அடுத்த இரண்டு நாளில் அவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என கூறியுள்ளனர்.