Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. காயங்களுடன் தப்பிய தம்பதியினர்…. நிவாரண உதவி வழங்கிய அதிகாரிகள்….!!

ஓட்டு வீடு இடிந்து விழுந்து தம்பதியினர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நம்பிதாங்கல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டு வீடு இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

அதன்பின் அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் மழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராமமூர்த்தி நிவாரண உதவி வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி ஷோபனாராசன் மற்றும் கலவை தாசில்தார் சமீம் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளனர்.

Categories

Tech |