‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 175 கோடி வசூல் செய்திருப்பதாக இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வினய் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.