Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

30_ம் தேதி கரையை கடக்கும் ”ஃபனி” புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக கோடை மழையும்  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளது என சென்னை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.


‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும் இந்த புயல் 30-ம் தேதி தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையை கடக்கும் போது சுமார் 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்றும் , பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Categories

Tech |